Wednesday 29 July 2015

கலாமை நேசிப்பவரா நீங்கள்...

கலாமை நேசிப்பவரா நீங்கள்...
அவரது கருத்துக்களை சுவாசிப்பவரா?
அவருக்கு மரியாதை செலுத்த உங்களுக்கு
அருமையான வாய்ப்பு
வரும் 2020ம் ஆண்டில்
வளமையான, வலிமையான, தூய்மையான
தேசமாக இந்தியா உருவாக வேண்டும்.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில், ஒரு மரக்கன்றாவது நடவேண்டும்
என்று, கலாம் விரும்பினார்; கனவு கண்டார்.
அவரது மறைவுக்கு உண்மையான மரியாதை
செலுத்தும் விதமாக நாம், ஒவ்வொருவரும்,
ஆளுக்கொரு மரக்கன்று நட வேண்டும்.
கலாமின் கனவுப்படி, நாம் நடும் மரக்கன்றுகள்,
2020ம் ஆண்டில் நன்கு வளர்ந்து, இந்தியா பசுமை தேசம் என,
பறைசாற்றும். இதற்கான பணிகளை இன்றே துவக்குவோம்.
நமது வீட்டில், அருகிலுள்ள தகுதியான இடத்தில்,
மரக்கன்றுகளை நட்டு பராமரிப்போம்.
கலாமின் நனவை நனவாக்குவோம்.

No comments:

Post a Comment